மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சானது சேவ் த சில்ரன் ( Save the Children ) நிறுவனத்தின் நிதி ஏற்பாடுகளின் அடிப்படையில் இந்தக் கருத்திட்டத்தை அமுல்படுத்துகின்றது. மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சிறுவர் செயலகத்துடன் இணைந்து சிறுவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான கருத்திட்டத்தின் பணிகளை அமுல்படுத்துவதற்கான பொறுப்புக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
சேவ் த சில்ரன் ( Save the Children ) நிறுவனமானது பிரதானமாக 4 துறைகளின் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பு, அபிவிருத்தி மற்றும் பங்கேட்பு ஆகிய உரிமைகளை இலங்கைச் சமூகத்தில் வலுவூட்டுவதற்கு இந்தக் கருத்திட்டத்தினுள் நிதிப் பங்களிப்பைப் பெற்றுக்கொடுக்கின்றது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும் போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்திற்கு விசேடமானதொரு பொறுப்பு 2016 ஆம் ஆண்டில் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் இந்தத் திணைக்களத்திற்கு ரூ.மி. 35.35 ஆன ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட இந்த ஏற்பாட்டுத் தொகைகள் பின்வரும் பணிகளை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்டன:
சிறுவர்களின் சமூகப் பாதுகாப்புக்கான செயற்றிட்டத்தின் மூலம் இலங்கைச் சிறுவர்களின் பாதுகாப்பு அபிவிருத்திக்காக அமுல்படுத்தப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டங்கள் சிறுவர்களுக்கு மென்மேலும் உகந்த சூழலை உருவாக்குவதற்கு விசேட பங்களிப்பை வழங்கும் என்பது மிகவும் தெளிவான விடயமாகும்.